உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை உள்பட பல சேவைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாது திருமலையில் சுவாமிக்கு நித்ய கல்யாணமும் பச்சை தோரணங்களும் கட்டப்படுகிறது.
பிரம்மோற்சவ விழா
ஸ்ரீநிவாசனுக்கு தினசரி மட்டுமல்லாது வாராவாரமும், மாதந்தோறும் பல சேவைகள் விழக்கள் நடந்ந வண்ணம் இருக்கிறது. இந்த அனைத்து விழாக்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்புடையுதாகும்.
ஏனெனில் ஏழுமலையானுக்கு பிரம்ம தேவன் முன்னின்று முதன்முதலாக உற்சவம் நடத்தியதால் இந்த விழாவிற்கு பிரம்மோற்சவ விழா என்று பெயர் வந்தது.
ஆண்டுதோறும் நவராத்திரி சமயங்களில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா தெடர்ந்து 10 நாட்கள் மிகவும் வைபோகமாக நடைபெறும்.
நவராத்திரி பிரம்மோற்சவம்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வார்சீக பிரம்மோற்சவமும், அதை தொடர்ந்து நவராத்திரி சமயங்களில் வழக்கம் போல் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவம் விசேஷ பிரம்மோற்சவம் ஆகும்.
கண்கொள்ளாகாட்சி
இந்த பிரம்மோற்சவ விழாக்கள் ஏழுமலையானின் வாகனமான கருடனின் முத்திரிரையுடன் கொடியேற்றத்தில் தொடங்கி மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் திருவீதி உhல வந்து தினசரி தொடர்ந்து 9 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.
முதலில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனமும் பின்னர் வாகுதியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனமும், அதை தொடர்ந்து அன்னவாகனம், சிம்மவாகனம், முத்து பல்லக்கு ஊர்வலம், கற்பக விருட்ச வாகனம், தங்க பூபால வாகனம், மோகினி அவதாரம் கருட வாகனம், யானை வாகம், சூரியபிரபை, சந்திரபிரபை, ரத உற்சவம் குதிரை வாகனம் மற்றும் கடைசியாக ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்தாழ்வாருக்கு சக்ர ஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மணவாள பெருமாள்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மனைவி ரானி சமவாயி 966-ம் ஆண்டு ஜுன் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மணவாள பெருமாள் எனும் உற்சவ மூர்த்தியை ஏழுமலையான் கோவிலுக்கு சமர்ப்பித்து உள்ளார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் நான்கு மாடவீதிகளிலும் திருவீதி உலா நடந்ததாக தெரிய வந்துள்ளது.
கிபி 1254-ம் ஆண்டு பல்லவ அரசனான விஜய கண்ட கோபாலதேவர் காலத்தில் பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்று வந்ததற்கான ஆதராரங்கள் உள்ளன. அதன் பின் வீரநரசிங்க தேவுரு எனும் அரசர் பங்குனி உற்சவம் பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
தங்க முலாம்
இந்த கால கட்டத்தில் தான் வீர நரசிங்க தேவுடு தன்னுடைய எடைக்கு எடையாக தங்க நாணயங்களை கொண்டு துலாபாரமிட்டு ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது.
கி.பி. 1328-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ஆடி திருநாள் உற்சவங்களை திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ திருவேங்கட நாத யாதவராயுலு அரசர் நடத்தி வந்ததார்.
இதை தொடர்ந்து ஸ்ரீவீரபிரதாப தேவராய மஹா ராயுலு என்பவர் கி.பி.1429-ம் ஆண்டு ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாவை நடத்தி வந்துள்ளார்.
புஷ்பயாகம்
கி.பி. 1446-ம் ஆண்டு ஸ்ரீஹரிராயுறு மூலம் மாசி திருநாள் விழாக்கள் திருமலையில் நடைபெற்று வந்ததும் அப்போது பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான 11-ம் நாள் புஷ்ப யாகம் எனும் உற்சவம் நடைபெற்று வந்து உள்ளது.
இந்த உற்சவத்தில் எட்டு திக்பாலகர்களுக்கும் திருமாலிடம், பிரம்மோற்சவ விழா பணிகளை சிறப்பாக முடித்து கொடுத்து விடைபெறும் நாளாக கருதப்பட்டது.
கி.பி. 1476-ம் ஆண்டு ஸ்ரீ சடகோபன் நரசிங்க ராய முதலியாரால் சித்திரை மாத பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா காலங்களில் முதல் ஏழு நாட்கள் சுவாமிக்கு ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது.
வனபோஜம்
கி.பி. 1530-ம் ஆண்டு ஸ்ரீ வீர பிரதாப அச்சுத மகாராஜனால் கார்த்திகை மாதங்களில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாக்களில் வன போஜனம் எனும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் விரதமிருந்து தங்களது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து தங்கி, அங்குள்ள வனங்களில் சமையல் செய்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பிரம்மோற்சவ விழாங்களை கண்டு ஆனந்தம் அடைந்தனர்.
இந்த ஆதாரங்களையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய தமிழ் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் விமரிசையாக ஏழுமலையானுக்கு கொண்டாடப்பட்டு வந்து உள்ளது தெரியவருகிறது.
ரதோற்சவம்
ஆனால் இதில் புரட்டாசி, கார்த்திகை, பங்குனி, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்களில் மட்டும் ரதோற்சவம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசர்கள் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவினை பல்வேறு மாதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். அரசர்கள் அரசாண்ட காலம் மாறியதால் இந்த மாதபிரம்மோற்சவங்கள் நின்று போனது.
ஆனால் முதன்முதலில் பிரம்மன் தொடங்கி வைத்த பிரம்மோற்சவ விழா மட்டும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 4, 2011
பிரம்மோற்சவ வரலாறு
உறவுகள் மேம்பட ...
****
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும், தேவை இல்லாமலும், பின் விளைவு அறியாமலும், பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்
விட்டுக்கொடுங்கள்
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்
நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.
குறுகிய மனபான்மையை விட்டொழியுங்கள்.
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் .
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நிiன்த்து கர்வப்படாதீர்கள் .
அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
அற்ப விஷயங்களைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்
மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
புன்முறுவல் காட்டவும். சிற்சில அன்புச் கொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
LORD VENKATESHWARA
IF WE HAVE RIGHT VISION EVEN HILLS RESEMBLE THE DEITY
Watch this familiar picture (simple guess Tirumala hill)
Sunday, September 18, 2011
அகத்திக்கீரை

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.
அடங்கியுள்ள பொருட்கள் :
ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
மருத்துவப் பயன்கள்
[indent]
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்
அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.
அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.
அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.
அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.
இக்கீரை பித்த நோயை நீக்கும்.
இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.
மஹாபாரதம்
அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல.
முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.
பாண்டவர்கள்
தாய் சொல்லை தட்டாதவர்கள்
சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்
சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.
கௌரவர்கள்
சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.
தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்
சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.
பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்
ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.
திரெளபதி
மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம்.
அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.
அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை.
ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.
அர்ஜூனன்
கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.
பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க
ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.
கர்ணன்
நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.
துரியோதனன்
அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.
பீஷ்மர்
அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.
திருதிராஷ்டிரன்
கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு
துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.
குந்தி
தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.
யுத்தம்
யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை.
மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.
Wednesday, July 27, 2011
KNOWLEDGE
Knowledge is power
“Knowledge Is Power.”- Simple a proverb as it sounds to be but has some really deep meaning. Let us put it this way- if this world is the lock then knowledge is the only key to the lock. So in order to compete with the outside world it is necessary to keep in mind knowledge is essential. One way to attain that is through education. Based on the kind of education that a child gets today his future will be decided.
Both school and college education is of utmost necessity for a person if he has to get educated and attain further knowledge about life.
Schools, colleges and universities across the world have taken up the responsibility of educating the people and imparting necessary education to the students, so that they can attain great heights in life. Most of the educational institutes in the world are under the jurisdiction of the government but some of them are run by the private bodies as well. The Universities in Canada, USA, U.K and many of the sub continental institutions offers various courses to promote education and knowledge based studies, to the students through their campus education as well as through distance education programs.
Providing proper education and imparting valuable knowledge to all the children of a province remains the aim of all governments and online education process is helping the Endeavour in a big way. There are different courses that are on offer and you can choose according to your demand and requirement.
The University is the apex body of education and knowledge which looks to provide certificate courses in various department like English, mathematics, science, economics and many other subjects like SEO, E- marketing, Social media marketing etc as on line certificate courses. These courses help the students to get additional certificates which will help them in their future to get suitable jobs.
Members of Legislative Assembly
Chennai District
(Constituency Number-wise)
| AC No. | Assembly Constituency | Name of Member | Party |
| 11 | Dr. Radhakrishnan Nagar | Thiru P. Vetriivel | AIADMK |
| 12 | Perambur | Thiru A. Soundararajan | CPI(M) |
| 13 | Kolathur | Thiru M.K. Stalin | DMK |
| 14 | Villivakkam | Thiru J.C.D. Prabhakar | AIADMK |
| 15 | Thiru.Vi.Ka.Nagar | Thiru V. Neelakandan | AIADMK |
| 16 | Egmore (SC) | Thiru K. Nallathambi | DMDK |
| 17 | Royapuram | AIADMK | |
| 18 | Harbour | Thiru Pala. Karuppiah | AIADMK |
| 19 | Thiru J. Anbazhagan | DMK | |
| 20 | Thousand Lights | Tmt. B. Valarmathi | AIADMK |
| 21 | Tmt. S. Gokula Indira | AIADMK | |
| 22 | Thiru B. Parthasarathy | DMDK | |
| 23 | Saidapet | Thiru G. Senthamizhan | AIADMK |
| 24 | Thiru V.P. Kalairajan | AIADMK | |
| 25 | Mylapore | Tmt. R. Rajalakshmi | AIADMK |
| 26 | Velachery | Thiru M.K. Ashok | AIADMK |
