உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி அதிகாலை சுப்ரபாத சேவை முதல் இரவு ஏகாந்த சேவை உள்பட பல சேவைகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாது திருமலையில் சுவாமிக்கு நித்ய கல்யாணமும் பச்சை தோரணங்களும் கட்டப்படுகிறது.
பிரம்மோற்சவ விழா
ஸ்ரீநிவாசனுக்கு தினசரி மட்டுமல்லாது வாராவாரமும், மாதந்தோறும் பல சேவைகள் விழக்கள் நடந்ந வண்ணம் இருக்கிறது. இந்த அனைத்து விழாக்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் சிறப்புடையுதாகும்.
ஏனெனில் ஏழுமலையானுக்கு பிரம்ம தேவன் முன்னின்று முதன்முதலாக உற்சவம் நடத்தியதால் இந்த விழாவிற்கு பிரம்மோற்சவ விழா என்று பெயர் வந்தது.
ஆண்டுதோறும் நவராத்திரி சமயங்களில் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா தெடர்ந்து 10 நாட்கள் மிகவும் வைபோகமாக நடைபெறும்.
நவராத்திரி பிரம்மோற்சவம்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் வார்சீக பிரம்மோற்சவமும், அதை தொடர்ந்து நவராத்திரி சமயங்களில் வழக்கம் போல் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும். நவராத்திரி பிரம்மோற்சவம் விசேஷ பிரம்மோற்சவம் ஆகும்.
கண்கொள்ளாகாட்சி
இந்த பிரம்மோற்சவ விழாக்கள் ஏழுமலையானின் வாகனமான கருடனின் முத்திரிரையுடன் கொடியேற்றத்தில் தொடங்கி மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளிலும் திருவீதி உhல வந்து தினசரி தொடர்ந்து 9 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது கண்கொள்ளாக்காட்சியாகும்.
முதலில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனமும் பின்னர் வாகுதியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனமும், அதை தொடர்ந்து அன்னவாகனம், சிம்மவாகனம், முத்து பல்லக்கு ஊர்வலம், கற்பக விருட்ச வாகனம், தங்க பூபால வாகனம், மோகினி அவதாரம் கருட வாகனம், யானை வாகம், சூரியபிரபை, சந்திரபிரபை, ரத உற்சவம் குதிரை வாகனம் மற்றும் கடைசியாக ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்தாழ்வாருக்கு சக்ர ஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மணவாள பெருமாள்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மனைவி ரானி சமவாயி 966-ம் ஆண்டு ஜுன் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மணவாள பெருமாள் எனும் உற்சவ மூர்த்தியை ஏழுமலையான் கோவிலுக்கு சமர்ப்பித்து உள்ளார். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதங்களில் மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் நான்கு மாடவீதிகளிலும் திருவீதி உலா நடந்ததாக தெரிய வந்துள்ளது.
கிபி 1254-ம் ஆண்டு பல்லவ அரசனான விஜய கண்ட கோபாலதேவர் காலத்தில் பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற்று வந்ததற்கான ஆதராரங்கள் உள்ளன. அதன் பின் வீரநரசிங்க தேவுரு எனும் அரசர் பங்குனி உற்சவம் பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.
தங்க முலாம்
இந்த கால கட்டத்தில் தான் வீர நரசிங்க தேவுடு தன்னுடைய எடைக்கு எடையாக தங்க நாணயங்களை கொண்டு துலாபாரமிட்டு ஏழுமலையான் கோவில் விமான கோபுரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்டது.
கி.பி. 1328-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ஆடி திருநாள் உற்சவங்களை திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ திருவேங்கட நாத யாதவராயுலு அரசர் நடத்தி வந்ததார்.
இதை தொடர்ந்து ஸ்ரீவீரபிரதாப தேவராய மஹா ராயுலு என்பவர் கி.பி.1429-ம் ஆண்டு ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாவை நடத்தி வந்துள்ளார்.
புஷ்பயாகம்
கி.பி. 1446-ம் ஆண்டு ஸ்ரீஹரிராயுறு மூலம் மாசி திருநாள் விழாக்கள் திருமலையில் நடைபெற்று வந்ததும் அப்போது பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான 11-ம் நாள் புஷ்ப யாகம் எனும் உற்சவம் நடைபெற்று வந்து உள்ளது.
இந்த உற்சவத்தில் எட்டு திக்பாலகர்களுக்கும் திருமாலிடம், பிரம்மோற்சவ விழா பணிகளை சிறப்பாக முடித்து கொடுத்து விடைபெறும் நாளாக கருதப்பட்டது.
கி.பி. 1476-ம் ஆண்டு ஸ்ரீ சடகோபன் நரசிங்க ராய முதலியாரால் சித்திரை மாத பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழா காலங்களில் முதல் ஏழு நாட்கள் சுவாமிக்கு ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடைபெற்று வந்து உள்ளது.
வனபோஜம்
கி.பி. 1530-ம் ஆண்டு ஸ்ரீ வீர பிரதாப அச்சுத மகாராஜனால் கார்த்திகை மாதங்களில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாக்களில் வன போஜனம் எனும் நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக கருதப்பட்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் விரதமிருந்து தங்களது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்து தங்கி, அங்குள்ள வனங்களில் சமையல் செய்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டு பிரம்மோற்சவ விழாங்களை கண்டு ஆனந்தம் அடைந்தனர்.
இந்த ஆதாரங்களையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய தமிழ் மாதங்களில் பிரம்மோற்சவங்கள் விமரிசையாக ஏழுமலையானுக்கு கொண்டாடப்பட்டு வந்து உள்ளது தெரியவருகிறது.
ரதோற்சவம்
ஆனால் இதில் புரட்டாசி, கார்த்திகை, பங்குனி, தை ஆகிய மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்களில் மட்டும் ரதோற்சவம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசர்கள் திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவினை பல்வேறு மாதங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். அரசர்கள் அரசாண்ட காலம் மாறியதால் இந்த மாதபிரம்மோற்சவங்கள் நின்று போனது.
ஆனால் முதன்முதலில் பிரம்மன் தொடங்கி வைத்த பிரம்மோற்சவ விழா மட்டும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 4, 2011
பிரம்மோற்சவ வரலாறு
*****
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment